spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமரணத்தில் விளையாடிய பூனம் பாண்டே... வந்தது வக்கீல் நோட்டீஸ்...

மரணத்தில் விளையாடிய பூனம் பாண்டே… வந்தது வக்கீல் நோட்டீஸ்…

-

- Advertisement -
சர்ச்சைகளுக்கு குறைவு இல்லாமல் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்குபவர் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர், தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அவர் மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதன்பிறகு தனக்கென தனி இணையதளத்தை ஏற்படுத்தி அதில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நாளே தான் நலமுடன் இருப்பதாக அவரது பக்கத்தில் மீண்டும் பதிவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினர் கண்டனம் எழுப்பினர். அவரை கைது செய்யவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பூனம் பாண்டேவுக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், அவர் மக்களை வேண்டுமென்றே தவறாக வழி நடத்துகிறார். இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவதூறு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

MUST READ