- Advertisement -
தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கும் திலீப், நகைச்சுவை படம் ஒன்றில் நடித்துள்ளார்.

மோலிவுட் என்று அழைக்கப்படும் மலையாள திரையுலகில், மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் திலீப். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. நடிகை பாவனா தொடர்பாக எழுந்த பல பிரச்சனைகள், வழக்குகள் அண்மையில் முடிவுக்கு வந்தன. இதன் பிறகு கிட்டதட்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் திலீப் கவனம் செலுத்தி வருகிறார்.


