ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட் இன்று (பிப்.17) மாலை 05.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நடப்பாண்டில் இஸ்ரோ ஏவிய இரண்டாவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
ஜிஎஸ்எல்வி- F14 ராக்கெட்டில் இன்சாட்-3DS செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ வடிவமைத்துள்ள ‘இன்சாட்-3DS’ செயற்கைக்கோள் சுமார் 2,275 கிலோ எடைக்கொண்டது. ‘இன்சாட்-3DS’-ல் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 ஆய்வு கருவிகள் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பட்டாசு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் தான் ‘இன்சாட்-3DS’. புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வானிலைக்கான தகவல்களைத் துல்லியமாக அளிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.