பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை… ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்…
- Advertisement -

கதாநாயகி, வில்லி, பாடகி என பன்முகங்களோடு தமிழ் திரையுலகை கலக்கி வரும் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அவர் நடித்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, கமல் நடித்த விஸ்வரூபம், தரமணி , துப்பறிவாளன் என பல படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர சுந்தர் சி இயக்கிய அரண்மனை படங்களில் நடித்திருக்கிறார்


இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை 3-ம் பாகம். நடிகை மட்டுமன்றி சிறந்த பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆதவன், ஆயிரத்தில் ஒருவன், தீராத விளையாட்டு பிள்ளை, கோவா, மதராசப்பட்டினம், மன்மதன் அம்பு, தாதா, வெடி உள்பட பல படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். இதுதவிர, நண்பன், ஆடுகளம் ஆகிய படங்களில் டப்பிங்கும் அவர் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில், தான் பாலியல் தொல்லைக்கு ஆளான தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தனக்கு 11 வயது இருக்கும்போது குடும்பத்தினருடன் பேருந்தில் செல்லும்போது மர்ம நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து வீட்டில் கூட தெரிவிக்க தைரியம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.