திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவிற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று (ஏப்ரல் 05) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. புகழேந்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) காலை 10.30 மணிக்கு காலமானார்.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. புகழேந்தி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், நேற்றுவரை நம் INDIA கூட்டணியின் வெற்றிக்காக களப்பணியாற்றியவர். இவரைப் போன்ற எண்ணற்ற உடன்பிறப்புகளின் அர்ப்பணிப்பால் தான் எஃகு கோட்டையாக நிற்கிறது நம் கழகம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்