spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ ….. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் கடந்த 2019இல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?அதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்களால் வெகுவாக கவரப்பட்டு பிரதீப் ரங்க நாதனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் நடிக்கிறார். அதே சமயம் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மிஷ்கின், ஹர்ஷத் கான், வி ஜே சித்து, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ..... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது?மேலும் இந்த படத்தில் மலையாள நடிகை ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே டிராகன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு பின் தொடங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படமானது 2024 நவம்பர் மாதத்தில் திரையிட படம் முழுவீச்சில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ