spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கும் ஒரு எல்லை உண்டு... நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்...

எனக்கும் ஒரு எல்லை உண்டு… நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்…

-

- Advertisement -
தனக்கும் ஒரு எல்லை உண்டு, அதை மீற மாட்டேன் என பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர். கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அவர் திரைக்கு அறிமுகமாகினார். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகினார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

we-r-hiring
தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். பின்னர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் குட்பாய் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாலிவுட்டிலும் அவர் முன்னணி நடியாக மாறி இருக்கிறார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் என்ற திரைப்படம் வெளியானது.

தற்போது ரெயின்போ, தி கேர்ள் பிரண்ட், சிக்கந்தர், குபேரா என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இந்திய திரையுலகையே ரவுண்டு வருகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் அவர் கிளாமராக நடிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், தனக்கும் ஒரு எல்லை உண்டு, அதை மீற மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். திரையுலகிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

MUST READ