spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆங்கிலத்துக்கு எதிரான அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது! 5 காரணங்களை சொல்லும் தி வயர் இதழ்!

ஆங்கிலத்துக்கு எதிரான அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது! 5 காரணங்களை சொல்லும் தி வயர் இதழ்!

-

- Advertisement -

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மிரட்டல் ஆபத்தானது என்று தி வயர் ஆங்கில இழல் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான 5 காரணங்களையும் தி வயர் இதழ் பட்டியலிட்டுள்ளது.

we-r-hiring

“இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அமித் ஷாவின் பேச்சு தொடர்பான பதிவுகளை அனைத்து ஊடக நிறுவனங்களும் நீக்கி உள்ளன. இந்திய அரசியலில் இதுபோன்ற கருத்துக்கள்ள ஏற்கனவே வெளி வந்திருந்தாலும், ஆளும் பாஜகவில் ‘நம்பர் 2’ தலைவராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அமித் ஷாவின் நிலைப்பாடு என்பது, அவரது வார்த்தைகளுக்கு கூடுதல் எடையைக் கொடுக்கிறது. இந்துத்துவாவின் நீண்டகால சித்தாந்தமான “இந்தி – இந்து – இந்துஸ்தான்” என்கிற முழக்கத்தின் இருண்ட நிழலுடன், ஷாவின் கருத்து வெறும் ஒரு கலாச்சார அவதானிப்பு மட்டுமல்ல. இது ஆழமான அரசியல் மற்றும் உலகளாவிய தாக்கங்களைக் கொண்டுள்ளது, தேசிய அடையாளம், சமூக இயக்கம், அறிவுத்திறன் மற்றும் இந்தியாவின் சர்வதேச பிம்பம் போன்ற பிரச்சினைகளைத் தொடுகிறது.

மொழியியல் ஆதிக்கம், பிரிவினையை தூண்டுகிறது

இந்திய நாட்டின் வலிமை அதன் மொழியியல் பன்முகத்தன்மையில் தான் இருக்கிறது. இந்தியாவில் தேசிய மொழி என்று ஒன்று கிடையாது, ஆனால் அதில் 22 மொழிகள் உள்ளன. ஆங்கில மொழியை ஒரு அந்நியத் திணிப்பாக சித்தரித்து, அதை அவமானத்துடன் இணைப்பதன் மூலம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து மொழியியல் ஆதிக்கத்தின் தீப்பிழம்புகளைத் தூண்டுகிறது. பிராந்திய மற்றும் வகுப்புவாத பதட்டங்களுக்கு மொழி பெரும்பாலும் ஒரு வெடிப்புப் புள்ளியாக இருந்து வரும், ஒரு நாட்டில் இந்த போக்கு மிகவும் ஆபத்தானதாகும். இந்தியாவில், குறிப்பாக உயர் கல்வி, வணிகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளில், ஆங்கிலம் பெரும்பாலும் நடுநிலையான தொடர்பு மொழியாகச் செயல்படுகிறது. இந்தி பேசாத மாநிலங்கள், குறிப்பாக தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கில் உள்ளவை, அமித் ஷாவின் அறிக்கையை, முழு நாட்டிலும் ஒரு குறுகிய, இந்தி மைய அடையாளத்தைத் திணிக்கும் இந்துத்துவா ஆட்சியின் மற்றொரு முயற்சியாகக் கருத வாய்ப்புள்ளது. இது பிராந்திய பிளவுகளையும் வெறுப்பையும் மேலும் ஆழப்படுத்துகிறது.

இந்துத்துவாவை மேலும் வளர்ப்பதற்கான ஒரு காரணமாக காலனித்துவ மரபு

இந்திய அடையாளத்தின் மையமாக இந்தி மொழியை ஊக்குவிக்கும் பாஜகவின் நீண்டகால திட்டத்துடன் அமித் ஷாவின் கருத்துக்கள் ஒத்துப்போகிறது. ஆங்கில மொழியை காலனித்துவ மரபு மற்றும் “அவமானத்தின்” அடையாளமாக சித்தரிப்பதன் மூலம், அமித்ஷா தேசியவாத உணர்வுகளுக்கு அழைப்பு விடுக்கிறார் மற்றும் பாஜகவின் முக்கியமான அடித்தளத்தை ஒருங்கிணைக்கிறார். உண்மையான தேசபக்தி இந்திய மொழிகளைத் தழுவுவதோடு பிணைக்கப்பட்டுள்ளது என்ற கதையை உருவாக்க அமித்ஷாவின் சொல்லாட்சி உதவுகிறது. மேலும் இது பாஜகவின் பார்வையில் இந்திக்கான ஒரு மறைமுகமான சொல் ஆகும்.  ஆங்கிலம் ஒரு உலகளாவிய தொடர்பு மொழியாகவும், சர்வதேச பங்களிப்புக்கான ஒரு நடைமுறை கருவியாகவும் பரிணமித்துள்ளது. அமித் ஷா ஆங்கிலத்தை “அவமானத்தின்” அடையாளமாக கட்டமைப்பது, சித்தாந்த மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு உணர்வுப்பூர்மான பிரச்சினையைப் பயன்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இது பொதுக் கருத்தை குவிப்பதுடன், பொதுக்கல்வியின் தரம் குறித்த மிகவும் தேவையான விவாதத்திலிருந்து மக்களை திசை திருப்பலாம், இது பாஜக ஆளும் மாநிலங்களில் பாடப் புத்தகங்களை திருத்தி எழுதப்படுவதன் மூலம் எடுத்துக்காட்டாகும். ஏழைகள் வாழ்க்கையில் முன்னேறுவதையோ, கேள்விகள் கேட்பதையோ விரும்பாததால் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் ஆங்கிலத்தை எதிர்க்கின்றன என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
File Photo

இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை அச்சுறுத்துகிறது

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் அதிகார மையமாக இந்தியாவின் எழுச்சி என்பது, அதன் மிகப்பெரிய அளவிலான ஆங்கிலம் பேசும் திறமைகளின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த மொழியியல் சாதகம், சீனா போன்ற ஒரு நாட்டிற்கு பொறாமையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஆங்கிலத்தை எதிர்மறையாகக் காட்டுவது என்பது உலகிற்கு ஒரு பின்னடைவு செய்தியை அனுப்புகிறது. மேலும் உலகளாவிய முதலீட்டாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி ஒத்துழைப்பாளர்களிடம் இந்தியாவின் ஈர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயமும் உள்ளது. இது இந்திய இளைஞர்களை உலகளவில் போட்டித்தன்மை கொண்டவர்களாக மாற்றும் திறன்களைப் பெறுவதைத் தடுக்கும். அத்துடன் நாட்டின் எதிர்கால பொருளாதார வாய்ப்புகளையும் சேதப்படுத்தும். அமித் ஷாவின் கருத்து, இந்துத்துவா ஆட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கருதப்பட்டால், இந்தியாவின் வெளிப்படைத் தன்மை மற்றும் நவீனத்துவம் குறித்த கவலைகளை உருவாக்கும். மேலும் இந்தியா ஒரு உலகளாவிய தேசம், சர்வதேசத்துடன் தொடர்புகளுடைய நாடு என்கிற பிம்பத்தையும் பாதிக்கும்.

நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்… தமிழக அரசு

சமூக இயக்கம் மற்றும் கல்வியில் தாக்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி என்பது பெரும்பாலும் சிறந்த கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் மேல்நோக்கிய இயக்கம் முதலியவற்றுக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. தற்போது ஆங்கிலத்தை இழிவுபடுத்துவதன் மூலம், அமித் ஷாவின் கருத்து நடைமுறை காரணங்களுக்காக ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான மக்களை அந்நியப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இந்த கருத்து பயற்று மொழி குறித்த கொள்கை முடிவுகளையும் பாதிக்கலாம். மேலும் இந்த நடவடிக்கை சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு, உலகளாவிய வாய்ப்புகளை அணுகுவதை கட்டுப்படுத்தவும் கூடும். அமித்ஷாவின் கருத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும், ஆங்கில வழிக் கல்வியைப் பெறுபவர்களுக்கும், பெறாதவர்களுக்கும் இடையில் இருக்கும் சமூகப் பிளவுகளை மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

Village Girl reading book in lighting lamp

அறிவுத்திறனுக்கு எதிரானது, கலாச்சார பிற்போக்குத்தனங்களை ஊக்குவிக்கும்

ஆங்கில மொழி அறிவை கலாச்சார அவமானத்துடன் ஒப்பீடு செய்வது அமித் ஷாவின் அறிவுத்திறனுக்கு எதிரான ஒரு வடிவமாகும். இது ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர்கள், சிறந்த கல்வி பெற்றவர்கள் மற்றும் உலகளவில் இணைக்கப்பட்ட இந்தியர்களை, சட்ட விரோதமானவர்களாக மாற்றுகிறது. மேலும் உலகமயம் இந்தியர்களுக்குப் பொருந்தாதது என்று கூறுகிறது. இந்த செயல் சிந்தனையை மூடுகிறது. வெளிப்படைத்தன்மை இன்மையை ஊக்கப்படுத்துகிறது. இந்தியா உலகத்துடன் போட்டியில் ஈடுபட வேண்டிய நேரத்தில், உள்நோக்கிய மனநிலையை ஊக்குவிக்கிறது.

bjp

ஒட்டு மொத்தத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து என்பது மக்களை பிளவுபடுத்துவது மட்டுமல்ல; அது ஆபத்தானது ஆகும். இது சமூக இயக்கத்தை அச்சுறுத்துகிறது. மொழியியல் முரண்பாடுகளை விதைக்கிறது. இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறது. அறிவுத்திறனுக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. மேலும் நாடு எதிர்கொள்ளும் உண்மையான சவால்களிலிருந்து திசை திருப்புகிறது. ஷாவின் ‘அவமானம்’ என்ற சித்தாந்த சொல்லாடல் பொருத்தமற்றது, மேலும் நாட்டிற்கு தீவிரமாக தீங்கு விளைவிக்கும்.

MUST READ