அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி, பாஜக கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சி தலைமை பொறுப்பில் இருந்தும் சதிகள் அரங்கேறி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியின் தற்போதைய நிலை குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடையவதற்கு அவசியம் கிடையாது. கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தார். நாடாளுமன்ற தேர்தலின்போது தென்மாநில பொறுப்பாளராக போட்டார்கள். கடைசி நேரத்தில் பல்டி அடித்து ஓடி வந்துவிட்டார். தற்போதைய நிலையில் அதிமுகவின் உண்மையான ஓனர் எடப்பாடி கிடையாது. அவரை கூப்பிட்டால் அங்கு வந்து உட்காருவார். இல்லை என்றால் இல்லை. அவர் அருகில் உட்கார்ந்து அவ்வளவு பெரிய உருவம் உட்கார்ந்து கூட்டணி ஆட்சி என்று சொல்கிறது. பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரும் இல்லை. அமித்ஷாவும் அதிமுக உடன்தான் கூட்டணி என்று சொல்லியுள்ளார். எடப்பாடி பழனிசாமி என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை.
எடப்பாடி பழனிசாமியின் பையனை வைத்து மிரட்டிதான், அவரை பாஜக கூட்டணிக்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் எடப்பாடி தப்பிக்கவே முடியாது. மற்றொரு புறம் அவர் என்ன நினைக்கிறார் என்றால் முழுதாக பாஜக கூட்டணியில் போகவில்லை என்பதை பதிவு செய்துகொண்டே இருப்போம். எம்.பி தேர்தல் போல, சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கும் நேரத்தில் பாஜகவை கழற்றிவிட்டு, விஜயுடன் கூட்டணி வைத்துவிடலாம் என்ற திட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தரப்பில் இருந்து சிலர் எடப்பாடியிடம் பேசியுள்ளனர். அவர் தவெகவினரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவை கழற்றிவிட்டு கூட்டணிக்கு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் பாஜகவினரின் திட்டம் என்ன என்றால்? நீங்களே அதிமுக பொதுச் செயலாளராக இருக்கப்போவது இல்லை, கொஞ்சம் நாள் கழித்து உங்களை பொறுப்பில் இருந்து தூக்க போகிறமே என்று நினைக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி, கடைசி நேரத்தில் கவிழ்த்து விடுவார் என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும். இதனால் பாஜக ஓபிஎஸ்-ஐ அதிமுகவுக்குள் கொண்டு வந்துவிடுவார். இரட்டை இலை வழக்கில் பழைய நிலையே தொடரும் என்று தேர்தல் ஆணையம் சொல்லி விட்டால், ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆகிவிடுவார். எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர், மற்றொரு ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையனை அதிமுகவுக்குள் புகுத்தி விடுவார்கள். இந்த சூழலை இன்னும் 2, 3 மாதங்களில் மாற்றி விடுவார்கள். ஆனால் தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக தொடருவார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம், மோடி, அமித்ஷா மற்றும் அவர்களால் பாஜகவில் நியமிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாதவர்களை தலைவர்களாக நியமிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளது. நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ளார். இதனை தனது பதவி ஏற்பு நிகழ்வின்பாது அவர் தெரிவித்துள்ளார். மோடி, அமித்ஷா இருக்கும் வரை அண்ணாமலை பதவியில் இருப்பார். அதற்கு பிறகு அவர் பதவியில் இருக்க மாட்டார். அண்ணாமலை பாபாஜி குகைக்கு சென்றுள்ளதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். மக்கள் எல்லோரும் அவர் பாபாஜியுடன் தியானத்தில் இருப்பார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அவர் விமானம் பிடித்து டெல்லி வந்துவிட்டார்.
அண்ணாமலைக்கு பெரிய பொறுப்பு தருகிறேன் என்று மாவட்டத்திற்கு ஒரு ஆளை தேர்வு செய்கிற பொறுப்பை கொடுத்துவிட்டு வாழ்த்து அவருக்கு மட்டும் சொல்கிறார்கள். தற்போது பெரிய பொறுப்பு தருவார்கள் என்று டெல்லியில் அமர்ந்துள்ளார். இதனிடையே, அண்ணாமலையை கூப்பிட்டு இனி தமிழ்நாடு பாஜக பற்றி பேசக்கூடாது என்று நயினார் நாகேந்திரன் மிரட்டியுள்ளார். அண்ணாமலை எதிரிகளையோ, மாற்று கட்சியினரையோ கடுமையாக பேசியது கிடையாது. ஆனால் நயினார் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய வீடியோக்கள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இது தான் அவரது இன்னொரு முகமாகும். பாஜகவில் பல்வேறு அணிகளுக்குள் சண்டை போட்டுக்கொண்டு அவர்களே காலியாகி விடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.