Homeசெய்திகள்கட்டுரைஇஸ்ரேலை அலறவிட்ட ஈரான்! அமெரிக்கா, பிரிட்டனுக்கு எச்சரிக்கை! 

இஸ்ரேலை அலறவிட்ட ஈரான்! அமெரிக்கா, பிரிட்டனுக்கு எச்சரிக்கை! 

-

- Advertisement -

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகளை கொன்றது. அதற்கு பதிலடியாக ஈரான் நடத்தி வரும் தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போய் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த போரின் பின்னணி குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- இஸ்ரேல் மீது 2வது நாளாக நேற்று ஈரான் மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் தரப்பில் அதற்கு பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும், ஈரானின் 2 எண்ணெய் கிணறுகளின் மீது குண்டுகளை வீசியுள்ளது. குடியிருப்புகள் மீதும் குண்டுவீசியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதல் அமெரிக்காவையே கதி கலங்க செய்திருக்கிறது. எதிராளியிடம் என்ன ஆயுதங்கள் இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த நிலையில், ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கியுள்ளது.

இஸ்ரேலின் மத்திய ரகவோத் பகுதியில் உள்ள ராணுவ அறிவியல் பல்கலைக் கழகத்தில், அந்நாடு ராணுவம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானில் இருந்து இஸ்ரேல் 2100 கிலோ மீட்டர் தொலைவு உள்ள நிலையில், டெல் அவிவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 120 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் மரண ஓலம் கேட்டு ஓடியுள்ளனர்.

இந்த தாக்குதால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. 121 இடங்கள் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், 61 இடங்களை பிடிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். பிரதமர் நெதன்யாகுவின் லிகுவிட் கட்சிக்கு 31 இடங்கள் தான் உள்ளன. எஞ்சிய 30 இடங்களை மற்ற கட்சிகளிடம் கூட்டணி அமைத்து அவர் ஆட்சி நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகள் எல்லாம் வலதுசாரி கட்சிகள் என்பதால், அவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படவில்லை.

மற்றொன்று போர் நடைபெறுகிறபோது புதிய ஆட்சி அமைக்கவும் கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை. இதனிடையே இஸ்ரேல் போர் நிற்க இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று நெதன்யாகுவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நிற்கும். அல்லது அவர் பதவியில் இருந்து விலகினால் போர் நின்றுவிடும். 6 மாதங்களில் முடிந்திருக்க வேண்டிய நெதன்யாகுவின் ஆட்சியை 2 ஆண்டுகள் நீட்டித்தது, ஹமாஸ் இயக்கத்தினரின் தாக்குதல் தான். அதன் பிறகே அவர் போரை தொடங்கினார்.

இந்த நிலையில், ஈரான் நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்த பின்னணியில் இருந்து உதவி செய்வது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் தான். இதனால் அடுத்து பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அப்படி பிரிட்டன் மீது 8000 கி.மீ தொலைவுக்கு சென்று தாக்குகிற ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் அணு விஞ்ஞானிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக தான் டெல்அவிவ் மக்களை தெறித்து ஓடவிட்டிருக்கிறார்கள். மக்கள் பதுங்கு குழிகளுக்குள் சென்று தப்பித்துக் கொள்ளுமாறு இஸ்ரேல் அமைச்சர் கூறியுள்ளார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரான் அதிபரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக டெஹ்ரான் சென்றபோது அவரை இஸ்ரேல் படுகொலை செய்தது. அவர் தங்கியிருந்த தளத்தை மட்டும் துல்லியமாக ராக்கெட் வைத்து தகர்த்தது. ஈரானுக்குள்ளேயே ஆட்களை வைத்து இவ்வளவு துல்லியாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மீது கைவைக்காதது ஏன் என்கிற கேள்வி எழும்? அப்படி அவர்கள் காமேனி மீது கை வைத்தால் அடுத்த நொடியே இஸ்ரேல், அமெரிக்கா மீது அணுகுண்டு போய் விழும். இஸ்ரேல் அழிந்துவிடும்.

இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் இஸ்லாமிய நாடாக இருந்தபோதும், அந்நாட்டின் மன்னர், இஸ்ரேலின் ஆதரவாளர் ஆவார். அதற்கு அடுத்தபடியாக உள்ளது ஈராக். அங்கே அமெரிக்காவின் ராணுவ தளம் உள்ளது. கிட்டத்தட்ட 2000 கி.மீ தொலைவுக்கு மேலாக உள்ளதால் ஈரானில் பேலிஸ்டிக் வகை ஏவுகணைகளை மட்டுமே ஏவி தாக்குதல் நடத்த முடியும். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஹமாஸ் இயக்கத்தை பயன்படுத்தி, இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோமை காலி செய்துவிட்டனர்.  ஹமாஸ் அமைப்பினர் ஒரே நேரத்தில் 400 ஏவுகணைகளை ஏவி, அயர்ன்டோம் தொழில்நுட்பத்தை உடைத்தார்கள். இந்நிலையில், தற்போது ஈரானின் பேலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் ராணுவப் பல்கலைக்கழகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு தான் இஸ்ரேலின் பயங்கர ஆயுதங்கள் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளபோதும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலும் அதை கண்டிக்க மாட்டார்கள். ஆனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் எச்சரிக்கை விடுப்பார்கள். இந்நிலையில், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் தான் இஸ்ரேல், ஈரானை தாக்கியது. அவர்களின் வேட்டைநாய் தான் இஸ்ரேல். இதன்காரணமாக இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரான் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறது. அடுத்து இஸ்ரேல் தாக்கினால் மேலும் பலத்த அடி கொடுக்கப்படும் என்கிற அச்சத்தை ஈரான் கொடுத்திருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ