Homeசெய்திகள்கட்டுரைஉலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் எம்.பி-க்கள்! தோல்வியடைந்த மோடியின் வெளியுறவு கொள்கை! விளாசும் பொன்ராஜ்! 

உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் எம்.பி-க்கள்! தோல்வியடைந்த மோடியின் வெளியுறவு கொள்கை! விளாசும் பொன்ராஜ்! 

-

- Advertisement -

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்பட்டு நிற்பதற்கு, நமது வெளியுறவுக் கொள்கையே அடிப்படை காரணம் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதன் பின்னணி குறித்து  அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அந்த குற்றச்சாட்டை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மறுத்துள்ளார். ராகுல்காந்தி பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிவிட்டோம் என்று எதற்காக பாகிஸ்தானிடம் சொல்கிறார்கள். பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பாகிஸ்தான் நமக்கு தெரிவித்தார்களா? அப்போது உங்களுக்கும் அவர்களுக்கும் எதாவது புரிதல் உள்ளதா? அஜ்மல் கசாப், இந்தியாவிடம் சொல்லிவிட்டா உள்ளே வந்தார்?

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கிறது. அங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடைபெறவில்லை. அங்கு ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்பதுதான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையாகும். இதுநாள் வரை இந்தியா இந்த குற்றச்சாட்டை தான் அனைவரிடமும் சொல்லி வருகிறோம். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய உடன் ஒட்டுமொத்த நாடும் ராணுவத்தின் பின்னால் நின்றோம்.  அனைத்து முதல்வர்கள், ராகுல்காந்தி, எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்படி ஒட்டுமொத்த இந்தியாவும் அவர் பின்னால் நின்றதற்கு, பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் அல்லவா? அப்படி கேள்வி எழுப்பினால் தேச துரோகியா? நாம் இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தான் ஆக வேண்டும்.

தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானிடம் சொல்ல வேண்டுமா? கேட்டால் அவர்களும் அணு ஆயும் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் வைத்திருப்பது தகர குண்டுகள். இந்தியா வைத்திருப்பது இரும்பு குண்டுகள். இருவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லையா?. இது ஒட்டுமொத்த ராஜதந்திர தோல்வியாகும். வெளியுறவு அமைச்சக வியூகத்தின் தோல்வியாகும். இது ஜெய்சங்கரின் வெளியுறவு கொள்கையின் ஒட்டுமொத்த தோல்வியாகும். அவரது வெளியுறவு கொள்கை மோடியை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டது. 1971ல் இந்திராகாந்தி பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, வங்கதேசத்தை உருவாக்கினார். அப்போது முதல் பாகிஸ்தான் நமக்கு ஸ்டாராஜிக்காக எதிரி கிடையாது. நமது பாதுகாப்பு வழிமுறை 2 தான். மற்றவர்கள் தாக்குதல் நடத்தனால் நாம் எதிர்த்து அடிக்க வேண்டும். இது இந்திரா காந்தி கடைபிடித்த கொள்கையாகும். இந்த வியூகம் மோடி, ஜெய்சங்கருக்கு தெரியாது. அது தெரியாமல் தான் பாகிஸ்தானுடன் போய் எதிரியாக நிற்கிறார்கள். அதனால் தான் டிரம்ப் 2 பேரையும் தள்ளி போய் விளையாடுங்கள் என்று சொல்வது போல, போரை நிறுத்துங்கள் இல்லாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று மிரட்டியது.

இந்தியாவின் நீண்ட கால போர் திட்டங்கள், பாதுகாப்பு திட்டங்கள், அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தும் சீனாவுக்கு எதிராக தான் வடிவமைக்கப் பட்டு உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக அல்ல. அதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை. இந்தியாவை, சீனாவுக்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்றுதான் இந்திரா காந்தி எண்ணினார். அதுதான் 1971 அணு ஆயுத சோதனை நடத்தி இந்தியாவும் அணு ஆயுதம் வெடிக்க முடியும் என்று நம்பினார்கள். அதற்கு பாகிஸ்தான் தரப்பிலும் எதே செய்தார். அதற்கு பிறகுதான் இந்திரா காந்தி ஒருங்கிணைந்த ஏவுகணை உருவாக்கும் திட்டத்தை வகுக்கிறார். அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் வெங்கட்ராமண். எஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய அப்துல்கலாமை கூப்பிட்டு, இந்த பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவர்கள் உருவாக்கியவர்கள் மூலமாக தான் இன்றைய ஆகாஷ், அக்னி, பிரமோஸ் போன்ற ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அப்பட்டவர்களில் ஒருவரான அவினாஷ் சந்தர் என்பரை மோடி பதவி ஏற்றவுடன் டிஆர்டிஓ தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இந்தியா சுயசார்பு அடைய வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் மோடி எல்லவாற்றையும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு புரம்பானது : கனிமொழி எம்.பி

மத்திய அரசு நாடாளுமன்ற குழுக்களை அமைத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல உள்ளது. பாகிஸ்தான் இது தொடர்பாக எந்த நாடுகளிடம் புகார் தெரிவித்தது. அதற்காக நாம் போய் இத்தனை நாடுகளிடம் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது. அங்கு தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி தெரிகிறது. வெளியுறவு அமைச்சகத்தின் தோல்வியாகும். 150 நாடுகளுக்கு மேலாக சென்று அனைத்து தலைவர்களையும் கட்டி கட்டி பிடித்தார் பிரதமர் மோடி. எந்த நாடாவது இந்தியாவின் பின்னால் நின்றதா? அமெரிக்கா அதிபர் டிரம்ப் சொன்னதால் போரை நிறுத்த வில்லை என்கிறார்கள். அவர் சொன்னதை கேட்டுதானே போர் நிறுத்தம் நடைபெற்றது. உக்ரைன் – ரஷ்யா இடையே போரை நிறுத்த அந்நாட்டு அதிபர்களிடம் டிரம்ப் நேரடியாக பேசி போரை நிறுத்த கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரதமர்களிடம் தனக்கு கீழ் உள்ள அமைச்சரை பேச வைத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அவரே அறிவிக்கிறார். அப்போது, டிரம்ப் இந்தியாவை எங்கே வைத்திருக்கிறார் என் பாருங்கள்.

இந்தியாவை சீனாவுக்கு எதிராக உருவாக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு, ஒரு பொருளாதார வல்லரசாக, அறிவார்ந்த வல்லரசாக, ராணுவ வல்லரசாக மாற்றி இந்தியா சீனாவை விட ஜனநாயக நாடு, சீனாவுக்கு நிகரான பொருளாதார நாடு, சீனாவை விட அனைத்து துறைகளிலும் முன்னேறிய நாடு இந்தியா என்று நாட்டை வளர்ப்பதை விட்டுவிட்டு, பாகிஸ்தானுடன் போய் சண்டை போட்டு டிரம்ப் போரை நிறுத்தியது எவ்வளவு பெரிய தோல்வியாகும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமருக்கு உள்ளது. அதை விடுத்து உண்மையை சொன்ன விக்ரம் மிஸ்ரியை ட்ரோல் செய்வது. பாஜக அமைச்சர், அவர்களது சகோதரியை வைத்தே அவர்களை அடித்தோம் என்று சொல்லி சிறுமைப்படுத்தினார். அவரை கைதுசெய்ய உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தனை ட்ரோல் செய்த இவர்கள் தேச விரோதிகளா? நியாயமாக என்ன நடைபெற்றது என்று கேள்வி எழுப்பினால் அவர்கள் தேசதுரோகிளா? அப்படி இருக்கிறபோது 7 குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வலியுறுத்தல்!

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தோல்வி அடைந்ததாகும். ஏற்கனவே காங்கிரஸ் பின்பற்றிய பழைய கொள்கையை இந்தியா தொடர வேண்டாம், அதை மாற்ற வேண்டும் என்று அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், அவரது ஆலோசகரான நானும் பிரதமர் மோடி பதவி ஏற்புக்கு 2 நாட்கள் முன்பாக சென்று ஆவணங்களை கொடுத்தோம். நாங்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டதன் அடிப்படையில் சார்க் நாடுகளுக்கு என்ன வெளியுறவுக் கொள்கை, இலங்கைக்கு என்ன வெளியுறவு கொள்கை, சீனாவுக்கு என்ன வெளியுறவு கொள்கை, ஆசிய நாடுகளுக்கு என்ன கொள்கை, ஐரோப்பிய நாடுகளுக்கு என்ன வெளியுறவுக் கொள்கை என்று விளாவாரியாக ஆவணமாக கொடுத்தோம். ஆனால் பிரதமர் மோடி அற்றை தூக்கி போட்டுவிட்டு, அப்போது வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் சொன்னதை கேட்டார். அதன் காரணமமாக இன்றைக்கு உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ