பாஜகவின் முந்தைய நடவடிக்கைகள் காரணமாகவே வக்பு வாரிய விவகாரத்தில் பாஜக மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்தை கண்டு முஸ்லிம்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அச்சப்படுவது ஏன் என்று விளக்கம் அளித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:- வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்து ஏன் அச்சம் கொள்ள வேண்டி உள்ளது என்றால் அது குறித்து பேசும் பாஜகவும் சரி, பாஜக சார்பாக பேசுபவர்களும் சரி, முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். பெரும்பான்மையை தன்னுடைய கைகளில் வைத்திருக்கும் பாஜக வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறபோது முன்னுக்கு பின் முரணாக செயல்படுவார்கள். சிஏஏ-வால் என்ன பிரச்சினை வந்தது என்று கேட்கிறார்கள். அசாம் தவிர வேறு எங்கும் இதுவரை சிஏஏ அமல்படுத்தப்பட வில்லை. 2024 தேர்தலில் மற்ற இடங்களிலும் அமல்படுத்தப்படும் என்று பாஜகவினர் சொல்லி உள்ளனர்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி அல்ல. சிறுபான்மையினரை பாதுகாப்பதே ஜனநாயகம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் தெரிவித்துள்ளார். தற்போது சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ன ஆகி உள்ளது என்றால்? கோவிலில் வைத்து ஒரு இஸ்லாமிய பெண் கற்பழிக்கப்பட்டார் என்றால், அந்த கோவிலில் வழக்குடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்கிறார்கள். அந்த கைது நடவடிக்கையை எதிர்த்து ஒரு அமைச்சரே ஊர்வலம் செல்கிறார். இப்படி எல்லாம் நடப்பதை பார்த்து முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள்.
வக்பு விவகாரத்தில் அரசின் கட்டுப்பாட்டை அதிகரித்தால், இதுவரைக்கும் வக்பு சொத்து குறித்து பிரச்சினை இருந்தால் அந்த விவகாரத்தில் வக்பு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியானது. புதிய சட்டம் என்ன சொல்கிறது என்றால் வக்பு சொத்தில் பிரச்சினை என்றால் நீதிமன்றத்தை நாடலாம். மத விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டிற்கு மிகப் பெரிய உதாரணம் சுப்பிரமணிய சுவாமியில் தொடங்கி நம்ம தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் எல்லோரும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கக் கூடாது. அதை தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் எல்லாம் மன்னர்களால் கட்டப்பட்டவை ஆகும். மன்னர்கள் மக்கள் வரிப் பணத்தில் இருந்துதான் கோல்விகளை கட்டினார்கள். அப்போது இவை எல்லாம் கோவிலுக்கு சொந்தமானது.
மக்களின் பிரதிநியாக அரசு உள்ளபோது, அதனை அகற்றுங்கள் என்று சொல்லும் பாஜக, வக்பு வாரிய விவகாரத்தில் மட்டும் அரசின் கட்டுப்பாடுகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று சொல்வது. பாஜகவிடம் என்ன நியாயம் உள்ளது?. எல்லோருக்கும் தான் இந்த நாடு சொந்தமானது. எல்லோருக்கும் உரிமை இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இப்படி பட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வருவது, முஸ்லிம் அல்லாதவர்கள் வக்பு வாரியத்தில் இடம்பெறலாம் என்று சொல்வது. நீங்கள் சட்டம் போட்டு விடுவீர்கள். பிறகு நாங்கள் கேட்டால் அப்படி செய்யமாட்டோம் என்பீர்கள். யார் உங்களை நம்ப முடியும். இதுவரை உங்களது செயல்பாடுகள் எப்படி இருந்ததோ அதை வைத்துதான்.
வக்பு சொத்தில் பிரச்சினை என்றால் நீதிமன்றத் தலையிடலாம் என்று வக்பு சட்டத் திருத்தத்தில் கூறியுள்ளார்கள். அது தவறு ஒன்றும் கிடையாது. ஆனால் பாஜக, வக்பு வாரியத்தில் திரும்ப திரும்ப கொண்டு வருகிறீர்களே. இதேபோல் கோவில் சொத்து விவகாரத்திலும் இதுபோல நடந்து கொள்வார்களா? மும்பையில் உள்ள பிள்ளையார் கோவிலுககு இல்லாத சொத்துக்களா? இந்த சொத்துக்களை கொடுத்தது பொதுமக்கள் தானே. ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று முன்னோர்கள் சொன்னார்கள். கோவில் சொத்தை யாரும் எடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அந்த கோவிலுக்கு சொத்து எங்கு இருந்து வந்தது?
இதில் தொடக்கூடாது என்று சொல்லும் பாஜக, வக்பு வாரிய விவகாரத்தில் நீதிமன்ற தலையீட்டை கொண்டு வருவோம். இஸ்லாமியர் அல்லாதவரை உறுப்பினராக கொண்டு வருவோம் என்று சொல்கிறபோது, மக்களுக்கு சந்தேகம் வரத்தான் செய்யும். அவர்கள் மட்டும் இன்றி இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிற எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர்களது செயலை ஆதரிக்க மாட்டார்கள். இவர்களது முன் நடத்தை தான் நம்முன் முன்மாதிரியாக இருந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.