சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
அலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் முதல் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் அலந்தூரில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் 54.1 கி.மீ தொலைவிற்கு சென்னை மெட்ரோ இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் (பச்சை வழித்தடம்) வரையிலும் , விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் (நீள வழித்தடம்) வரையிலும் இயக்கப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் ரயில் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆலந்தூர் வரையில் மட்டுமே செல்லும். பயணிகள் ஆலந்தூரில் இறங்கி மாற்று பாதையாக நீள வழித்தடத்தில் அதாவது விம்கோ நகரிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் பயன்படுத்தி பயணிக்கவும் என மெட்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ஆலந்தூர் ரயில் நிலையத்தில் காலை 8:30 மணியிலிருந்து ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மாற்று வழியை பயன்படுத்தவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.