spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தொடர் மழை எதிரொலி - தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

தொடர் மழை எதிரொலி – தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

-

- Advertisement -

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் ஏராளமான வாகனஙகள் நிறுத்தப்பட்டுள்ளன.

we-r-hiring

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமா சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆர்.கே.நகர் மேற்கு பகுதியான வினோபா நகர், சத்யா நகர், நேதாஜி நகர், நெடுஞ்செழியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கியுள்ளது.

கடந்த காலங்களில் மழையால் வாகனங்கள் மிகுந்த சேதம் அடைந்திருந்த நிலையில், அதனை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கார், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

MUST READ