இயக்குனர் சங்கரின் 60-வது பிறந்தநாள் இன்று.
இந்திய சினிமாவில் மிகப்பிரமாண்டமான இயக்குனராக கருதப்படுபவர் சங்கர். இந்திய சினிமாவை உலக தரத்தில் கொண்டு சென்றவர்களுள் இவரும் ஒருவர். பிரம்மாண்டம் என்றாலே நினைவுக்கு வருவது இயக்குனர் சங்கரின் பெயர் தான். இவர். 1990 களுக்கு முன்பும் பின்பும் பல இயக்குனர்கள் திரையுலகில் வளம் வந்தாலும் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்டு மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார்.
இவருடைய பெரும்பாலான படங்கள் அனைத்து ரசிகர்களையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். இவர் தனது கடின உழைப்பால் பலவிதமான முரண்பாடுகளை மீறி திரை உலகில் சாதித்து வருகிறார்.
சங்கர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன் எஸ் ஏ சந்திரசேகரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதுமட்டுமில்லாமல் மேடை நாடகங்களில் வசனம் மற்றும் கதை எழுதுவது போன்ற பணிகளை செய்து வந்தார்.
அதன் பின் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவரின் முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதன் பின் இவர் இயக்கிய இந்தியன், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் தனது படங்கள் அனைத்துமே சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளை யும் முன்வைப்பார். சாமானிய மக்களுக்கும் தனது படங்களின் மூலம் நம்பிக்கை கொடுப்பவர் தான் சங்கர். லஞ்சம், ஊழல், மக்களை பாதிக்கும் பிரச்சனைகள், சமூகத்தில் பொறுப்பெண்மையால் ஏற்படும் பிரச்சனைகள் புலி தேவைகளை தனது படங்களின் மூலம் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவார்.
ரஜினி, விஜய், கமல், விக்ரம் என பல உச்ச நட்சத்திரங்களை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காண்பித்து சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் அவர்களை அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருத்தி படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைப்பார். ஏ ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையில் பாடல்களை பிரம்மாண்டமாக படம் பிடித்து பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பார்.
திரை உலகில் ஒரு இயக்குனராக சங்கரின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் புதுப்புது டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இவருடைய பெரும்பாலான படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகம் பயன்படுத்தப்படும்.இவரின் எந்திரன் 2.0 போன்ற திரைப்படங்கள் இந்திய சினிமாவுக்கே மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் இயக்குனர் சங்கர் தன் வாழ்நாளில் செய்த சாதனைகளை முறியடிக்கும் விதமாக ஒரு சரித்திர படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இவர் ராம்சரனின் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் இவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதன்படி எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். இவ்வாறாக 30 ஆண்டுகளைக் கடந்து பல அரிய சாதனைகளை புரிந்து வரும் ஷங்கர் இன்னும் பல சாதனைகளை புரிய நாமும் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.