Homeசெய்திகள்சினிமா'பிரேமலு 2' படத்தில் இணையும் புதுவரவு ..... யார் தெரியுமா?

‘பிரேமலு 2’ படத்தில் இணையும் புதுவரவு ….. யார் தெரியுமா?

-

சமீப காலமாக வெளியாகும் மலையாள திரைப்படங்கள் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் ஏகோபித்த
வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. 'பிரேமலு 2' படத்தில் இணையும் புதுவரவு ..... யார் தெரியுமா?அந்த வகையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படமும் உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கியிருந்த நிலையில் நஸ்லேன், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து இயக்கியிருந்த இந்த படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு ஓடிடியில் வெளியான பிறகும் திரும்பிய பக்கமெல்லாம் இந்த படத்தின் பேச்சு தான்.

இந்நிலையில் பிரேமலு 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பகத் பாஸில், திலீஸ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் உள்ளிட்டோர் தயாரிக்க உள்ளனர். மேலும் பிரேமலு 2 திரைப்படம் 2025-ல் வெளியாக இருப்பதாகவும் அதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்றும் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தில் புது வரவாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.'பிரேமலு 2' படத்தில் இணையும் புதுவரவு ..... யார் தெரியுமா?

நடிகை அனுஸ்வரா ராஜன், தமிழில் திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அனுஸ்வரா ராஜன் மலையாளத்தில் நேரு, ஆபிரகாம் ஓஸ்லர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ