Homeசெய்திகள்சினிமாரஜினி தான் எனக்கு சிவன்..... மகா சிவராத்திரியையொட்டி பூஜை செய்து வழிபட்ட ரசிகர்!

ரஜினி தான் எனக்கு சிவன்….. மகா சிவராத்திரியையொட்டி பூஜை செய்து வழிபட்ட ரசிகர்!

-

மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு சென்று லட்சக்கணக்கானோர் மகா சிவராத்திரியில் கலந்து கொண்டனர். பல திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். ரஜினி தான் எனக்கு சிவன்..... மகா சிவராத்திரியையொட்டி பூஜை செய்து வழிபட்ட ரசிகர்!தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம், அமலா பால் போன்ற திரை பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு மனம் உருகி சிவபெருமானை வழிபாடு செய்து அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். இது ஒரு புறம் இருக்க பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தலும், இரவு முழுவதும் கண்விழித்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் சிவராத்திரியை கொண்டாடினர். இந்நிலையில் தான் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் நகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர், ரஜினிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வந்துள்ளார். மகா சிவராத்திரி தினமான நேற்று சிவன் வேடத்தில் இருக்கும் ரஜினியின் புகைப்படத்தை வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்.ரஜினி தான் எனக்கு சிவன்..... மகா சிவராத்திரியையொட்டி பூஜை செய்து வழிபட்ட ரசிகர்! இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியின் மீது அவர் கொண்ட அன்பின் வெளிப்பாடு இது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தும், மற்றொருபுறம் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது என்று சிலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ