spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் நாகார்ஜுனா!

பாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் நாகார்ஜுனா!

-

- Advertisement -

நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அந்த வகையில் இவர், நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். பாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் நாகார்ஜுனா!இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படம் மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜுனாவை வயதான ரசிகர் ஒருவர் காணவந்துள்ளார். அப்போது அந்த முதியவரை நாகார்ஜுனாவின் பாதுகாவலர்கள் கீழே தள்ளி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் இதற்காக நாகார்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த முதியவரின் வயதிற்காவது மரியாதை கொடுத்து பொறுமையாக நடந்திருக்கலாம் இன்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

இது தொடர்பாக நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த முதியவரிடம் மன்னிப்பு கோரி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த வீடியோ என் கவனத்திற்கு வந்தது. இப்படி நடந்திருக்க கூடாது நான் அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜுனா.

MUST READ