spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பொன்னம்பலம் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

நடிகர் பொன்னம்பலம் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

-

- Advertisement -

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிபட்டு தரை மட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் உருக்கத்துடன் ஆடியோ வெளியிட்டுள்ளாா்.நடிகர் பொன்னம்பலம் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிபிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. இந்நிலையில் தனக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதியில் இருந்து எனக்கு மிகவும் உடல்நலம் முடியாமல் போய்விட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது மறுபடியும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளேன். ஆசனவாய் அருகே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. குணமடைய இரண்டு மாதங்கள் என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு என்னால் வேலைக்கு செல்ல முடியாது. சரத்குமார், ரவி மோகன், கே.எஸ் ரவிக்குமார், கமல், நிழல்கள் ரவி, சிம்பு உள்ளிட்டோர் எனக்கு உதவி செய்தனர் மேலும் பல நடிகர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும் பொருளாதாரத்தில் பல சிக்கல்கள் வந்துவிட்டது. என்னையே என்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. நான் உயிருடன் இருப்பதற்கு காரணம் ஆண்டவனின் மிகப் பெரிய சக்திதான். கடந்த 5 வருடங்களாக‌ எந்த வேலைக்கும் போகவில்லை. மருத்துவமனை சிகிச்சையிலேயே சென்றுவிட்டது. பொருளாதார பிரச்சினையில் மிகவும் அடிபட்டு தரை மட்டத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு இப்படி ஆனதை ஒரு குறையாக வெளிப்படுத்த வேண்டாம். நான் கொடுத்து வைத்த பணத்தை யாரிடமும் கேட்கவில்லை. அன்பு மட்டுமே கொடுத்துள்ளேன். அதே அன்பு எனக்கு இரட்டிப்பாக கிடைத்தது. நான் விரைவில் குணமடைந்து திரும்பி வர ஆண்டவனை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மிசா காலத்தைவிட மோடி ஆட்சியில் கூடுதல் நெருக்கடி இருக்கிறது – செல்வப் பெருந்தகை

MUST READ