நயன்தாரா தான் என் ரோல்மாடல்… பிரபல தெலுங்கு நடிகை நெகிழ்ச்சி…
- Advertisement -
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கிஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படம் சுமார் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்க காரணமாக அமைந்தன. இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் திரையரங்குகளில் வௌியான குண்டூர் காரம் திரைப்படத்தில், நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருப்பார்.

குண்டூர் காரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி, மற்றும் விஜய் நடிக்கும் கோட் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும், பாலிவுட்டிலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீ லீலா சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் பிடித்த நடிகை யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ரீ லீலா, தனக்கு பிடித்த நடிகை நயன்தாரா தான் என்றும், அவர் தான் தனது ரோல் மாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.