spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டிராகன்' படத்திற்கு பிறகு ..... அஸ்வத் மாரிமுத்து போட்ட ட்வீட் வைரல்!

‘டிராகன்’ படத்திற்கு பிறகு ….. அஸ்வத் மாரிமுத்து போட்ட ட்வீட் வைரல்!

-

- Advertisement -

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.'டிராகன்' படத்திற்கு பிறகு ..... அஸ்வத் மாரிமுத்து போட்ட ட்வீட் வைரல்!

கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கியவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலேயே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'டிராகன்' படத்திற்கு பிறகு ..... அஸ்வத் மாரிமுத்து போட்ட ட்வீட் வைரல்!இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், சிம்புவிற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதாகவும் சிம்பு அந்தப் படத்திற்கு தயாரானால் படத்தை விரைவில் தொடங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் தனது எக்ஸ் தள பக்கத்தில், “டிராகன் படத்திற்கு பிறகு” என்று குறிப்பிட்டு பட்டாசுகளின் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

இதன் மூலம் அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்திற்கு பிறகு சிம்புவின் படத்தை இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் அஸ்வத் மாரிமுத்து – சிம்பு இணைய உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ