spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தில் சிங்கிளாக வரும் அஜித்.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் சிங்கிளாக வரும் அஜித்…. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தீபாவளி தினத்தை குறி வைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 'குட் பேட் அக்லி' படத்தில் சிங்கிளாக வரும் அஜித்.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருக்கிறது. அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் ஒன்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. 'குட் பேட் அக்லி' படத்தில் சிங்கிளாக வரும் அஜித்.... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!அதாவது ஏற்கனவே வெளியான தகவலின்படி நடிகர் அஜித், குட் பேட் அக்லி படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்தன. எனவே வரலாறு படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தை மூன்று வேடங்களில் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நடிகர் அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை எனவும் ஒரே ஒரு அஜித் தான், மூன்று அவதாரம் எடுக்கிறார் எனவும் புதிய தகவல் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ