குட் பேட் அக்லி படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. அதைத்தொடர்ந்து அஜித்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் நேற்று (ஏப்ரல் 4) வெளியான இந்த படத்தின் டிரைலரில் திரிஷா, பிரபு, யோகி பாபு போன்றோர் காட்டப்பட்டிருந்தனர். அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தது ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே கொடுத்த அப்டேட்டின் படி இப்படமானது அப்பா – மகன் உறவே மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதும் உறுதியானது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது வில்லன் அர்ஜுன் தாஸ், எக்ஸ் கேங்ஸ்டரான அஜித்தின் மகன் கார்த்திகேயா தேவ்- ஐ கடத்தி சென்று விடுவார் என்றும் அவரை நடிகர் அஜித் போராடி மீட்பது தான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லன் கும்பல் திரிஷாவை கடத்திச் செல்ல, அவரை பல போராட்டங்களுக்குப் பிறகு காப்பாற்றுவதுதான் படத்தின் கதையாக இருந்தது. அதே போன்று குட் பேட் அக்லி படத்தின் கதையும் இருப்பதால் இதை ஆதிக் ரவிச்சந்திரன் எப்படி எடுத்திருப்பார்? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.