தெலுங்கு திரை உலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ஏற்கனவே அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றிருந்தார். தற்போது மீண்டும் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி தெலுங்கானா அரசின் கடார் திரைப்பட விருதுகளில் முதல் சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த படமாக கல்கி 2898 AD படமும் சிறந்த இயக்குனராக நாக் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது சிறந்த படமாக பொட்டேல், மூன்றாவது சிறந்த படமாக லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் 35 இதி சின்ன கத காது என்ற படத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சூர்யாவின் சனிக்கிழமை படத்திற்காக சிறந்த நடிகராக எஸ்.ஜே. சூர்யா தேர்வாகியுள்ளார். இவ்வாறு பல்வேறு பிரிவுகளின் கீழ் பல விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அடுத்தது இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் முதல் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளியான படங்களை சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கு மட்டும் மொத்தம் 14 பிரிவுகளில் சிறந்த விருது வழங்கப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 14ஆம் தேதி தெலுங்கானா அரசு 21 விருதுகளை வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.