Homeசெய்திகள்சினிமாதேசிய விருது பெற்றமைக்காக நடிகர் மாதவனை வாழ்த்திய ஏ ஆர் ரகுமான்!

தேசிய விருது பெற்றமைக்காக நடிகர் மாதவனை வாழ்த்திய ஏ ஆர் ரகுமான்!

-

இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் திரையுலக பிரபலங்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், சிறந்த படங்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு மாதவன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான
ராக்கெட்ரி நம்பி விளைவு படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. மாதவனுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாதவனுக்கு எனது வாழ்த்துக்கள். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி படம் பார்க்கும்போது அந்த படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் அது நினைவில் உள்ளது. ஓபன்ஹெய்மர் படத்தை விட உங்கள் படம் எனக்கு பிடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ