Homeசெய்திகள்சினிமாசூதுகவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்... புதிய பாடல் வெளியீடு...

சூதுகவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்… புதிய பாடல் வெளியீடு…

-

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் சூதுகவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு கோலிவுட்டில் வௌியான திரைப்படம் தான் சூதுகவ்வும். இத்திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதோடு, இன்று வரை கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றி, படத்தில் நடித்த விஜய்சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் பாபி சிம்ஹாவுக்கு தமிழ் சினிமாவில் படிக்கட்டுகளாய் மாறியது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
சூது கவ்வும் திரைப்படத்தை திருக்குமரன் நிறுவனம் தயாரித்திருந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா இப்படத்தில் நாயகனாக நடிக்க, கருணாகரன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்.எஸ்.அர்ஜூன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும் என்ற பெயரில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் சமூக வலைதளங்களில் வௌியாகி டிரெண்டாகி வருகிறது.

MUST READ