நடிகர் விஜய் சேதுபதி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இயக்குனர் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் பி. ஆறுமுககுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ (Oru Nalla Naal Paathu Solren).

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் பழங்குடி இனத்தவராக நடித்திருந்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்நிலையில் விஜய் சேதுபதி மீண்டும் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறதாம். மே 15-ம் தேதி படக்குழுவினர் மலேசியா சென்று படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.