Homeசெய்திகள்சினிமாதேசிங்கு ராஜா பாகம் 2 படப்பிடிப்பு தீவிரம்... மே மாதத்தில் வௌியிட முடிவு...

தேசிங்கு ராஜா பாகம் 2 படப்பிடிப்பு தீவிரம்… மே மாதத்தில் வௌியிட முடிவு…

-

தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை கோடை விடுமுறையான மே மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்தார். சூரி, சிங்கம் புலி, உள்பட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எழில் இப்படத்தை இயக்கினார். இரு குடும்பங்களுக்கு ஏற்பட்ட பரம்பரை பிரச்சனையை மிகவும் எதார்த்தமாக நகைச்சுவையாக காட்டியிருப்பர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை எடுத்து எழில் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, தெலுங்கு நடிகைகள் பூஜிதா, ஹர்ஷிதா நாயகிகளாக ஒப்பந்தம் ஆகியிருக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில், ஜனா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்படபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தை போலவே, தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகமும் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், கோடை விடுமுறையான மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

MUST READ