நடிகர் தனுஷ், அஜித்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 21 அன்று வெளியாகி ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் தனுஷ், தனது 52 வது படமான இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படமானது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் தற்போது இது குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது தனுஷ், நடிகர் அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இந்த காம்போ நடந்தால் எப்படி இருக்கும் என இப்பொழுதே கற்பனை செய்ய தயாராகி விட்டார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.