தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. இவர் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் கமர்சியல் படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான சாமி, ஆறு, சிங்கம் போன்ற ஆகிய படங்கள் விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இருப்பினும் சமீபகாலமாக ஹரி இயக்கத்தில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேசமயம் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், அந்த படத்தினை நடிகை நயன்தாரா தயாரிக்கப் போவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல தகவல்கள் வெளிவந்தது.
பின்னர் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இயக்குனர் ஹரியின் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஹரியின் அடுத்த படத்தில் நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார் என லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பிரசாந்த், ஹரி கூட்டணியில் வெளியான ‘தமிழ்’ திரைப்படம் ஹிட் படமாக அமைந்த நிலையில் இவர்களது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, சாய் பல்லவி, கயடு லோஹர் ஆகிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது வருகின்ற ஏப்ரல் 6 பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -