Homeசெய்திகள்சினிமாவெளியீட்டிற்குத் தயாராகும் நிறங்கள் மூன்று!

வெளியீட்டிற்குத் தயாராகும் நிறங்கள் மூன்று!

-

அதர்வா, சத்யராஜ், ரகுமான் நடிப்பில் உருவாகியிருக்கும் நிறங்கள் மூன்று திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் நரேந். மாறன், மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்டம் நிறங்கள் மூன்று. இந்த படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், ரகுமான், நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்கிறார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

நிறங்கள் மூன்று படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு அடைந்தது. இதை தொடர்ந்து, பின்னணி வேலைகள் மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நிறங்கள் மூன்று திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ