Homeசெய்திகள்சினிமா'விஜயகாந்த் மறைந்தாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் பல நூற்றாண்டுகள் இருக்கும்'.... இயக்குனர் சுசீந்திரன்!

‘விஜயகாந்த் மறைந்தாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் பல நூற்றாண்டுகள் இருக்கும்’…. இயக்குனர் சுசீந்திரன்!

-

- Advertisement -

விஜயகாந்தின் மறைவிற்கு இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைந்தாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் பல நூற்றாண்டுகள் இருக்கும்.... இயக்குனர் சுசீந்திரன்!விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்றைய முன் தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6:10 மணி அளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இச்செய்தி தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் விஜயகாந்த் அவர் நேசித்த கட்சி அலுவலகத்திலேயே முழு அரசு மரியாதை உடல் நல்லடக்கம் செய்ய இருக்கிறது. இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், “விஜயகாந்தின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே விஜயகாந்தின் ரசிகன் நான். முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். பள்ளிக்கூடத்திற்கு போகாமல் அவரின் படம் பார்ப்பதற்காக செல்வேன். விஜயகாந்த் சார் மறைந்தாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும். விஜயகாந்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் ரசிகர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ