Homeசெய்திகள்சினிமாஅந்த 3 வினாடி வீடியோவுடன் வெளியாகும் ஆவணப்படம் ..... சர்ச்சைகளுக்கிடையிலும் காட்சிகளை நீக்காத நயன்!

அந்த 3 வினாடி வீடியோவுடன் வெளியாகும் ஆவணப்படம் ….. சர்ச்சைகளுக்கிடையிலும் காட்சிகளை நீக்காத நயன்!

-

- Advertisement -
kadalkanni

நானும் ரெளடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த மூன்று வினாடி வீடியோவை ட்ரெய்லரில் பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்த நிலையில் அந்த மூன்று வினாடி வீடியோவை தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் நடிகை நயன்தாரா!அந்த 3 வினாடி வீடியோவுடன் வெளியாகும் ஆவணப்படம் ..... சர்ச்சைகளுக்கிடையிலும் காட்சிகளை நீக்காத நயன்!

நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை காதல், திருமணம் ஆகியவற்றை தழுவி உருவாகி இருக்கும் ஆவணப்படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் திரையிடப்பட்டது.

முழுக்க முழுக்க நயன்தாராவின் திரை பயணத்தையும் காதல் மற்றும் திருமணத்தை மையப்படுத்தி உருவான இப்படம் நாளை (நவம்பர் 18ஆம் தேதி) நள்ளிரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சினிமா பயணத்தை கூறும் வகையில் சில படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் பயன்படுத்தி இருந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதல் வயப்பட்ட நானும் ரெளடி தான் திரைப்படம் இந்த ஆவணப்படத்தில் ஒரு முக்கிய அம்சமாகவே அமைந்துவிட்டது.அந்த 3 வினாடி வீடியோவுடன் வெளியாகும் ஆவணப்படம் ..... சர்ச்சைகளுக்கிடையிலும் காட்சிகளை நீக்காத நயன்!

இந்த நிலையில் நானும் ரெளடி தான் திரைப்படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் பயன்படுத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து சில காட்சிகளையும் பாடல்களையும் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நாளை வெளியாகும் இந்த ஆவணப்படத்திற்கு இதுவரை தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் நடிகை நயன்தாராவின் ஆவணப்பட ட்ரைலர் வெளியாகி இருந்தது. அந்த ட்ரெய்லரில் மூன்று வினாடிக்கான காட்சிகள் நானும் ரெளடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருந்தது. இந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு தான் நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி நஷ்ட ஈடாக கேட்கப்பட்டுள்ளது.அந்த 3 வினாடி வீடியோவுடன் வெளியாகும் ஆவணப்படம் ..... சர்ச்சைகளுக்கிடையிலும் காட்சிகளை நீக்காத நயன்!

இந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட தனுஷின் இந்த செயல் நயன்தாராவை பொறுமையிழக்க செய்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் நடிகை நயன்தாரா நடிகர் தனுஷின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் ஒன்றை நேற்று (நவம்பர் 16) வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகர் தனுஷ் பேசிய மேடை பேச்சுக்களை பகிர்ந்து வாழு வாழ விடு என்ற பதிவையும், அந்த மூன்று வினாடி காட்சிகளுக்கு நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டாரோ அந்த நோட்டீஸையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நயன்தாராவின் கடிதம் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியும் தான் நேற்று சமூக வலைதளங்களில் பேசு பொருளாக உலா வந்தது.அந்த 3 வினாடி வீடியோவுடன் வெளியாகும் ஆவணப்படம் ..... சர்ச்சைகளுக்கிடையிலும் காட்சிகளை நீக்காத நயன்!

மேலும் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் உள்ள ஆவணப்படமானது நாளை வெளியாகும் நிலையில், தனுஷ் தரப்பில் இருந்து காப்புரிமை கேட்கப்பட்ட அந்த காட்சிகள் இதுவரை நீக்கப்படாமல் இருக்கிறது. நானும் ரெளடி தான் திரைப்படத்தின் காட்சிகளும் இசையும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல் அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்று இருக்கிறது. இந்த காட்சி அமைப்போடு நாளை ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படமானது வெளியானால், தனுஷ் தரப்பில் இருந்து என்ன கேள்வி எழுப்பப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

MUST READ