Homeசெய்திகள்சினிமாஅனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க.... செய்தியாளர்களிடம் கடுப்பான இளையராஜா!

அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க…. செய்தியாளர்களிடம் கடுப்பான இளையராஜா!

-

- Advertisement -

இசைஞானி என்று அன்று முதல் இன்று வரை ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இளையராஜா. அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க.... செய்தியாளர்களிடம் கடுப்பான இளையராஜா!அந்த அளவிற்கு இவர் தன்னுடைய இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் இவர், வருகின்ற மார்ச் 8ஆம் தேதி லண்டனில் வேலியண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ள சிம்பொனி இசையை அரங்கேற்ற இருக்கிறார். அதாவது இசைஞானி இளையராஜா இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற பட்டத்தினை வெல்ல இருக்கிறார். இதற்காக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனவே லண்டன் செல்வதற்காக கிளம்பிய இளையராஜாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு இளையராஜா, மனுசனாக எப்படி உணர்கிறீர்கள்? என கேளுங்கள் என்று சொன்னார்.அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க.... செய்தியாளர்களிடம் கடுப்பான இளையராஜா! அடுத்தது இசையமைப்பாளர் தேவா தன்னுடைய இசையை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறி இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கடுப்பான இளையராஜா, “இது போன்ற அனாவசியமான கேள்விகளை கேட்காதீங்க. உங்கள் அனைவரின் சார்பாக தான் லண்டன் செல்கிறேன். இது நம் நாட்டின் பெருமை. இன்கிரெடிபிள் (Incredible) இந்தியா போல் இன்கிரெடிபிள் இளையராஜா நான்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ