டிராகன் பட நடிகை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் இவர் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தன்னுடைய 49வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் சிம்பு, கல்லூரி மாணவனாக (அ) பேராசிரியராக (அ) ரௌடியாக நடிக்கிறார் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சாய் பல்லவி, சந்தானம் ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என சொல்லப்பட்டது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் STR 49 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டிராகன் பட நடிகை கயடு லோஹர் நடிக்கப் போகிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே நடிகை கயடு லோஹர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார். இந்நிலையில் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.