டிராகன் பட இயக்குனர் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் ஓ மை கடவுளே எனும் திரைப்படம் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் பின்னர் சிம்புவின் 51வது படத்தை இயக்க உள்ளார் அஸ்வத். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அஸ்வத் மாரிமுத்து மீண்டும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த படம் STR 51 படத்திற்கு பிறகு தான் தொடங்கும். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் புதிய படம் ஒன்றை எடுக்க அஸ்வத் மாரிமுத்தை அணுகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த திட்டம் உறுதி செய்யப்படவில்லை என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.