பிரபல நடிகை ஒருவர் மணிரத்னம் படத்திற்காக பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் நடித்து வந்தவர். தற்போது தமிழ் சினிமாவிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இந்த படத்தில் நடித்ததற்காக அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றார். அதைத்தொடர்ந்து கட்டாகுஸ்தி திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் கலக்கி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அடுத்த அடுத்த படங்களில் இந்நிலையில் தற்போது அடுத்த இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். அதன்படி மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் ஐஸ்வர்யா லக்ஷ்மி, தக் லைஃப் படத்தில் நடிப்பதற்காக பல பட வாய்ப்புகளை இழந்துள்ளாராம்.
அதாவது 96 படம் இயக்குனர் பிரேம்குமாரின் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அந்த படம் கார் ரேஸ் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் அதில் ஐஸ்வர்யா லக்ஷ்மியை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா லக்ஷ்மி, தக் லைஃப் படத்தில் கமிட் ஆகி விட்டதால் வேறு எந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்கவில்லையாம். அது மட்டும் இல்லாமல் வேறு சில பட வாய்ப்புகள் வந்ததையும் தவிர்த்து விட்டாராம். ஏனென்றால் மிகப்பெரிய இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்தால் பெயர் கிடைக்கும் என்பதால் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லையாம். இருப்பினும் ஐஸ்வர்யா லக்ஷ்மி, தக் லைஃப் படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.