Homeசெய்திகள்சினிமாஇலங்கையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி... கூட்டத்தில் சிக்கி பலர் காயம்..

இலங்கையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி… கூட்டத்தில் சிக்கி பலர் காயம்..

-

- Advertisement -
இலங்கையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள், நடிகைகளை காண முண்டியடித்துச் சென்றபோது கூட்டத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்களாக வலம் வருபவர்கள், தற்போது முக்கிய நகரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி ஆகியோர் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். இதில் சில கோளாறுகளும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின்போது பலர் உள்ளே அனுமதிக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இது போன்ற சம்பவம் மேலும் ஒன்று தற்போது அரங்கேறி இருக்கிறது.

இலங்கையில், பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஸ், தமன்னா, மிர்ச்சி சிவா, யோகி பாபு, சாண்டி, ரம்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை காண கட்டுக்கடங்காமல் மக்கள் கூடினர். அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும், நடிகைகள் ரம்பா மற்றும் தமன்னாவை காண ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்துச் சென்றதால், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர். இதனால், நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ