பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், கிங்ஸ்டன் படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இடி முழக்கம், மெண்டல் மனதில் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் கிங்ஸ்டன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜி.வி. பிரகாஷின் 25ஆவது படம் ஆகும். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ் தானே தயாரித்து, நடித்து, இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து திவ்ய பாரதி, சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹாரர் திரில்லர் ஜானரியில் உருவாகும் இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் சாகச படமாகும். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
#GVPrakash about Kingston
– #Kingston is a dream journey, when we see Hollywood movie like #HarryPotter or #IronMan, this kind of multiverse films.
– I always had this dream of doing something like that in India.pic.twitter.com/SWIn3WDUxn— Movie Tamil (@MovieTamil4) March 4, 2025
அதன்படி வருகின்ற மார்ச் 7ஆம் தேதி படம் திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்,”மற்றும் ஆகிய ஹாலிவுட் படங்களை ஒப்பிடும்போது கிங்ஸ்டன் படமானது ஒரு கனவு பயணம். இந்தியாவில் அப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் எனக்கு ஒரு கனவு இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.