Homeசெய்திகள்சினிமாஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஹிப் ஹாப் ஆதி!

ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஹிப் ஹாப் ஆதி!

-

- Advertisement -

ஹிப் ஹாப் ஆதி ஏழை மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஹிப் ஹாப் ஆதி!

ஹிப் ஹாப் ஆதி ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உருவெடுத்த இவர் ஆம்பள, அரண்மனை, தனி ஒருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் இவர் நடிகராகவும், இயக்குனராகவும் மாறி மீசைய முறுக்கு எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நட்பே, துணை வீரன் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக கடைசி உலகப் போர் எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து, இசையும் அமைத்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே இனிவரும் நாட்களில் இசையில் மட்டும் கவனம் செலுத்த உள்ளாராம் ஹிப் ஹாப் ஆதி. அதன்படி சுந்தர்.சி, நயன்தாரா கூட்டணியில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஹிப் ஹாப் ஆதி சமீபத்தில் சில கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு இலவசமாக இசை நிகழ்ச்சி வழங்கி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஹிப் ஹாப் ஆதி!இந்நிலையில் தான் ஹிப் ஹாப் ஆதி, ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் தற்போது அறிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹிப் ஹாப் ஆதி ஏற்கனவே பல நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் இவருடைய இந்த முயற்சியும் அதில் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இருந்த ரசிகர்களும் ஹிப் ஹாப் ஆதியை பாராட்டி வருகின்றனர்.

MUST READ