spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹிரித்திக் ரோஷனை நான் அப்படி பேசி இருக்கக் கூடாது..... வருத்தம் தெரிவித்த ராஜமௌலி!

ஹிரித்திக் ரோஷனை நான் அப்படி பேசி இருக்கக் கூடாது….. வருத்தம் தெரிவித்த ராஜமௌலி!

-

- Advertisement -

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக புகழ்பெற்றவர் ராஜமௌலி. இவருடைய படங்கள் பிரம்மாண்டமாகவும் அதே சமயம் எமோஷனலாகவும் பார்வையாளர்களுடன் ஒன்றிப்போவதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை பெற்று வருகின்றன. ஹிரித்திக் ரோஷனை நான் அப்படி பேசி இருக்கக் கூடாது..... வருத்தம் தெரிவித்த ராஜமௌலி!அந்த வகையில் பாகுபலி 1, 2 திரைப்படங்கள் மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் உலக அளவில் இவரை பிரபலமடையச் செய்தன. அதேபோல் பாகுபலி திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் மிகப் பிரபலம் அடைந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்நிலையில் 2006ம் ஆண்டு நடந்த ஒரு விஷயத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் ராஜமௌலி. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட பில்லா படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருந்தார். அந்த படத்தை பற்றி ராஜமௌலி பேசிய பொழுது 2006 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான “தூம் 2” படத்தை பார்த்ததாகவும் அதில் நடித்திருந்த ஹிரித்திக் ரோஷனைப் பார்த்து தான் வியந்ததாகவும் அதுபோல தென்னிந்திய நடிகர்கள் யாருமே இல்லையே என எண்ணியதாக அவர் கூறியிருந்தார். ஹிரித்திக் ரோஷனை நான் அப்படி பேசி இருக்கக் கூடாது..... வருத்தம் தெரிவித்த ராஜமௌலி!ஆனால் “பில்லா” திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்த பின்பு பிரபாஸ் – ஐப் பார்த்து வியந்ததாகவும் பிரபாஸ் உடன் ஒப்பிட்டு பார்த்தால் ஹிரித்திக் ரோஷன் ஒன்றுமே இல்லை என்றும் கூறியிருந்தார் ராஜமௌலி. மேலும் தெலுங்கு சினிமாவும் பாலிவுட் சினிமாவுக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். ராஜமௌலியின் இந்த பேச்சு அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் இந்த சம்பவம் குறித்து மனம் திறந்த ராஜமௌலி, “நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. ஹிரித்திக் ரோஷனை குறைவாக மதிப்பிட்டு நான் கூறவில்லை. அவர் மீது எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு” என்று விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ