ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படம் குறித்து பேசியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் விஷால், எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் அஜித்தின் 63வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, மகனாக கார்த்திகேயா தேவ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதேசமயம் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களும் இப்படத்தை திரையில் பார்த்து, கொண்டாடி தீர்க்க மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், இப்படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “குட் பேட் அக்லி டீசரை பார்த்த பிறகு எல்லோரும் இந்த படம் ஒரு சூப்பரான மாஸ் படம்னு நினைத்தபோது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால் இரண்டரை மணி நேரம் நம்மால் மாஸ் பண்ண முடியாது. அதனால எல்லா தரப்பு ரசிகர்களுக்கும், குடும்பத்திற்கும் ஏற்ற மாதிரி ட்ரைலரை எடிட் பண்ண சொல்லி எடிட்டரிடம் சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.