சூர்யா 47 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘கருப்பு’ திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இது தவிர வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சூர்யாவின் 47வது படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கப் போவதாகவும் இதனை 2D நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் சுசின் ஷியாம் இசையமைப்பாளராக பணியாற்ற இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளார் என புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நடிகை நஸ்ரியா, சூர்யாவுடன் இணைந்து புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்காமல் போனது. எனவே சூர்யா 47 படத்தில் சூர்யா – நஸ்ரியா கூட்டணி இணையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.