பிரபல இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த தகவல் திரை உலக பிரபலங்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 1990 காலகட்டங்களில் இருந்து சினிமா துறையில் பணியாற்றியவர் தன் கடின உழைப்பினால் ஒரு சிறந்த கலைஞனாக உருவெடுத்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுலசேகரன் எனும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாரிமுத்து மையப்படுத்தியே எதிர்நீச்சல் கதை நகர்கிறது. இந்நிலையில் இவர் உயிரிழந்த தகவல் அவரின் ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன்.
ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/ryN5EmskHD
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2023
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில்,” தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.