spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் 'சூர்யா 44'.... உறுதி செய்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் ‘சூர்யா 44’…. உறுதி செய்த கார்த்திக் சுப்பராஜ்!

-

- Advertisement -

சூர்யா 44 திரைப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் 'சூர்யா 44'.... உறுதி செய்த கார்த்திக் சுப்பராஜ்!

சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14 இல் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் 'சூர்யா 44'.... உறுதி செய்த கார்த்திக் சுப்பராஜ்!ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு அந்தமான், ஊட்டி கேரளா, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், படத்தை முடித்து இருந்தாலும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளுக்காக சில நாட்கள் தேவைப்படுவதாகவும் இதன் காரணமாக அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

MUST READ