spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கிங்ஸ்டன்' படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.... கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு!

‘கிங்ஸ்டன்’ படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…. கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கிங்ஸ்டன் படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.'கிங்ஸ்டன்' படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.... கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு!ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கிங்ஸ்டன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜி.வி. பிரகாஷ் தயாரித்து இசையும் அமைத்துள்ளார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் தவிர திவ்யபாரதி, சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படமானது ஹாரர் திரில்லர் ஜானரில் இந்தியாவின் முதல் கடல் சாகச படமாக உருவாகியுள்ளது. 'கிங்ஸ்டன்' படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.... கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு!அதன்படி இப்படமானது வருகின்ற பிப்ரவரி 7 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்கள், பாடல்கள், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு வெகுவாக கவர்ந்தது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த ட்ரெய்லரில் அருமையான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், “கிங்ஸ்டன் படத்தின் சுவாரஸ்யமாகவும், தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் கடல் கற்பனை- சாகச திரைப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ