பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான கஸ்தூரி ராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் குறித்து பேசி உள்ளார்.
கடந்த மே 1ஆம் தேதி அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், மிதுன், கமலேஷ், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இலங்கையிலிருந்து பொருளாதார கஷ்டம் காரணமாக தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை எமோஷனலாகவும், நகைச்சுவையாகவும் மிகவும் எதார்த்தமான திரைக்கதையில் கொடுத்திருந்தார் அபிஷன் ஜீவிந்த். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. மேலும் பலரும் இந்த படத்தின் இயக்குனர் அபிஷனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா, “டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் சின்ன பையன் ரொம்ப வித்தியாசமா ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அந்த படத்திற்கு என்ன தேவையோ அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதைத் தவிர அந்த படத்தில் எதுவுமே இல்லை. இப்ப எல்லாம் இப்படியா எடுக்குறாங்க.
இப்ப வர்ற இயக்குனர்கள் எல்லாம் அந்த படத்தில் இருந்து கொஞ்சம் இந்த படத்தில் இருந்து கொஞ்சம் எடுக்குறாங்க. 10 பேர் ஹோட்டல்ல ரூம் போட்டு உக்காந்துகிட்டு கொரியன் படத்தில் என்ன இருக்கு ஜப்பானீஸ் படத்துல என்ன இருக்கு என்றெல்லாம் பார்த்துதான் படம் எடுக்குறாங்க. இதுதான் இப்போதைய சினிமாவின் நிலை” என்று தெரிவித்துள்ளார்.