Homeசெய்திகள்சினிமாஉதவி செய்வதற்காகவே சம்பாதிக்கணும்னு தோணுது .....மெய் சிலர்க்க வைக்கும் KPY பாலாவின் பதில்!

உதவி செய்வதற்காகவே சம்பாதிக்கணும்னு தோணுது …..மெய் சிலர்க்க வைக்கும் KPY பாலாவின் பதில்!

-

KPY பாலா ஆரம்பத்தில் சின்னத்திரையில் தான் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். உதவி செய்வதற்காகவே சம்பாதிக்கணும்னு தோணுது .....மெய் சிலர்க்க வைக்கும் KPY பாலாவின் பதில்!அந்த வகையில் இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். மேலும் வெள்ளி திரையிலும் பல படங்களில் நடித்து வருகிறார் KPY பாலா. இது ஒரு பக்கம் இருந்தாலும் பாலா சமூக சேவைகள் செய்வதில் ஆர்வம் உடையவர். அந்த வகையில் இயலாத பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியிருக்கிறார். அதிலும் குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தி தருவது, குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது போன்றவை பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இது தவிர KPY பாலா, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்கி கொடுப்பது பஞ்சாப் பல உதவிகளை செய்து வருகிறார். உதவி செய்வதற்காகவே சம்பாதிக்கணும்னு தோணுது .....மெய் சிலர்க்க வைக்கும் KPY பாலாவின் பதில்!அதே சமயம் ராகவா லாரன்ஸ், பாலா, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து மாற்றம் என்ற அமைப்பினை தொடங்கி அதன் மூலம் பலருக்கும் உதவி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் KPY பாலாவிடம் கேள்வி எழுப்பிய போது அருமையாக பதில் அளித்துள்ளார். அதாவது செய்தியாளர்கள் பாலாவிடம் சமூக சேவை செய்வதற்கு இப்பொழுதிலிருந்து உங்களுக்கு ஆர்வம் வந்தது? அந்த ஆர்வம் இருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினர். அதற்கு பாலா, “முன்பிலிருந்தே இந்த ஆர்வம் எனக்கு இருக்கிறது. காரணம் என்னவென்றால், நமக்கு கிடைக்கவில்லை மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும் என்பதுதான்” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், மாற்றம் என்ற அமைப்பு விரிவடையுமா? என்று கேட்டனர். உதவி செய்வதற்காகவே சம்பாதிக்கணும்னு தோணுது .....மெய் சிலர்க்க வைக்கும் KPY பாலாவின் பதில்!அதற்கு பாலா, “விரிவடையும் என்பதை மக்களின் மனசு நிறைவடையும்” என்று மெய் சிலர்க்க வைக்கும் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய பாலா, “மாற்றம் என்று அமைப்பின் மூலம் ராகவா லாரன்ஸ் ஆகியோர் அனைவரும் இணைந்து சமூக சேவை செய்து வருகிறோம். நம்மையும் மதித்து நிறைய பேர் மனு கொடுக்கிறார்கள். அதனால் அவர்களுக்காகவே ஓடிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்று தன் அருமையான பதிவுகளால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் பாலா. பாலாவின் செயல்கள் மட்டுமல்ல அவருடைய பதில்களும் பலரால் பாராட்டப்படுகிறது. தான் மனிதநேயமிக்க மனிதன் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார் பாலா.

MUST READ