Homeசெய்திகள்சினிமாபிரச்சினை இல்லாத இடமே இல்லை.. நான் சாதிக்க காரணம் அப்பாதான்.. குபேரா விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி

பிரச்சினை இல்லாத இடமே இல்லை.. நான் சாதிக்க காரணம் அப்பாதான்.. குபேரா விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி

-

- Advertisement -

 

எல்லா இடத்திலும்தான் பிரச்சினை இருக்கிறது என்றும் ரூ.150 சம்பாதிச்சா ரூ.200க்கு பிரச்சனை வருகிறது. அதே போன்று ரூ.1 கோடி சம்பாதிச்சா ரூ.2 கோடிக்கு பிரச்சனை வருகிறது என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக தயாரிக்கப்பட்டுள்ள குபேரா படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் 20ஆம் தேதி குபேரா படம் வெளியாக உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாத்தில் ‘குபேர’ படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தனுஷ் பேசுகையில், தனது தந்தையை நினைவுகூர்ந்தார். ‘குபேர’ ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் தனது சாதனைகளைப் பற்றிய காணொளியைக் கண்டு, தனது தந்தையை நினைத்து நெகிழ்ச்சியடைந்தார். இந்த காணொளியைப் பார்க்கும்போது என் அப்பாதான் நினைவுக்கு வருகிறார். எனவே, முதலில் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்’ என்று தனுஷ் கூறினார். நான் நிறைய சாதித்ததாகக் கூறுகிறார்கள், ஆனால் என் தந்தை சாதித்ததோடு ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.

அவர் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். விவசாயியாக வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று இந்த நிலையை அடைந்துள்ளார். நான் இன்று இங்கே இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம்.

, ‘குபேர’ தனது இரண்டாவது தெலுங்குப் படம் என்றும், 51வது தமிழ்ப் படம். ‘சேகர் கம்முலா உயிரைப் பணயம் வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார். சேகர் கம்முலா பிடிவாதக்காரர் என்று ராஜமௌலி சார் சொன்னார், ஆனால் அது நல்ல காரணத்திற்காகத்தான்’ அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சினிமா மீது அவருக்கு அந்த அளவுக்குப் பைத்தியம். அவரது இயக்கத்தில் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது என்று தனுஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தனுஷ் நாகார்ஜுனா சார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான மனிதர். நாகார்ஜுனா சாருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம் என்றும், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். தனது தங்கைகளுக்கு சிறு வயதில் நாகார்ஜுனா மீது கிரஷ் இருந்தது… அவரைப் பார்த்துப் பைத்தியமாக இருப்பார்கள்.

கதாநாயகி ரஷ்மிகா மந்தனாவை ஆயிரம் கோடி நட்சத்திரம், இரண்டாயிரம் கோடி நாயகி, தேசிய கிரஷ், அதிர்ஷ்ட நாயகி என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் இதெல்லாம் அவர் உருவாக்கிய கோட்டை. தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் இந்த நிலையை அடைந்துள்ளார். ஒரு சிறிய பெண்ணாகத் தொடங்கி, இன்று தேசிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் இது முழுக்க முழுக்க அவரது கடின உழைப்புதான். அந்தக் கடின உழைப்பால்தான் இதையெல்லாம் சாதித்துள்ளார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தனுஷ் தெரிவித்தார்.

ரூ.150 சம்பாதிச்சா ரூ.200க்கு பிரச்சனை வருகிறது. அதே போன்று ரூ.1 கோடி சம்பாதிச்சா ரூ.2 கோடிக்கு பிரச்சனை வருகிறது. ஆகையால் எல்லா இடத்திலும் பிரச்சனை இருக்கிறது. இஎம் ஐ, லோன் என்று எல்லா பிரச்சனையும் உண்டு. பிரச்சனை இல்லாத இடமே இல்லை. நம்மிடம் காசு, பணம் இல்லை என்றால் நமக்கு கிடைப்பது அம்மாவின் அன்பு மட்டும் தான் என்றும் தனுஷ் தெரிவித்தார்.

MUST READ