சூர்யா 45 படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த மே 1 அன்று ரெட்ரோ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சூர்யா, வக்கீலாகவும், அய்யனாராகவும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படமானது 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு ஆர்.ஜே. பாலாஜி, வேட்டை கருப்பு என்று தலைப்பு வைத்திருக்கிறாராம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் படமானது சக்தி வாய்ந்த காவல் தெய்வம் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாவதால் இந்த தலைப்பு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.